காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறுகுகள் தருவாயா
நதி என்பது ஓர்நாள் கடலென்பதை சேரும்
எப்போதுமே ஓடும் நதியாகலாம்
ரோஜா செடி போலவே நீ பூக்கலாம் இங்கே
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே
அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரந்தான் சாய்ந்திடக்கூடாது
தோழனே தோழனே ஓவியன் கைவலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
புயல் வீசுமே என்று கரையோரமாய் நின்று
அணைகட்டினால் அது ஓய்வதில்லை
மழை தூருமே என்று நடுவானிலே
திரைகட்டினால் மழை முடிவதில்லை
எரிமலைமேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது
மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட முடியாது
உன்னை யார் வெல்வது
சிப்பியின் பொறுமைதான் முத்துபோல் மின்னுது
இலைகளின் சக்திதான் கனிகளை தாங்குது
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா
No comments:
Post a Comment