Monday, 2 November 2015

                             
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா

விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா

வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா

விண்ணில் செல்லத்தான் உன் சிறுகுகள் தருவாயா



நதி என்பது ஓர்நாள் கடலென்பதை சேரும்

எப்போதுமே ஓடும் நதியாகலாம்

ரோஜா செடி போலவே நீ பூக்கலாம் இங்கே

காற்றோடு போராடும் குணம் வேண்டுமே



அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே

ஒரு பறவை மோதி கோபுரந்தான் சாய்ந்திடக்கூடாது

தோழனே தோழனே ஓவியன் கைவலி சித்திரம் ஆகுது

ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது



காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா

விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

புயல் வீசுமே என்று கரையோரமாய் நின்று

அணைகட்டினால் அது ஓய்வதில்லை

மழை தூருமே என்று நடுவானிலே

திரைகட்டினால் மழை முடிவதில்லை

எரிமலைமேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது

மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட முடியாது

உன்னை யார் வெல்வது

சிப்பியின் பொறுமைதான் முத்துபோல் மின்னுது

இலைகளின் சக்திதான் கனிகளை தாங்குது



காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா

விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா

வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா






                                  

No comments:

Post a Comment