மனித இனத்தை ஆண்டுகொண்டிருப்பவை இரண்டு கோட்பாடுகள்.
1, உழைப்பு+உற்பத்தி.
2, நிதி மூலதனம் +லாபம்
இவ்விரு கோட்பாடுகளில் ஏதோ ஒரு அணி உலகினை சர்வாதிகாரம் செய்து சமூகத்தை நடத்திக்கொண்டிருகிறது.
முதல் கோட்பாடு மார்க்சியம் மற்றும் சமூக உளவியல் அடிப்படையாக கொண்டுள்ளது.மக்களிடையே தவறுகள் நிகழும்போது சமூக இயக்கத்தை பரிசீலித்து அடிப்படை அமைப்பை புதுமையாக மாற்றிக்கொள்கிறது..தனிமனித குற்ற குணச்செயல்களுக்கு தண்டனை தந்து திருத்துகிறது.
இரண்டாவது கோட்பாடு இரு பிரிவினராக உள்ளது. 1) பொருளாதாரம் (நுகர்வுக்கலாச்சாரம்) மோகத்தை ஏற்படுத்துவதும் பணம் பொருள் செல்வம் சேர்க்க போட்டி பொறாமை தாழ்த்துவது வீழ்த்துவதுமான சமூக மரபு வளர்க்கப்படுகிறது.
2)மதவாதம் உணர்வுகளால் ஆதிக்கம் செய்து மக்களை உளவியல் அடிப்படையில் அடிமைப்படுத்தி, வைத்து ஆள்கிறது.இதில் போட்டி பொறாமைகள் இல்லை அராஜக அடக்குமுறையில் அடிமைப்படுத்துவது தாழ்த்தி வைப்பது, தள்ளி வைப்பது மரபாக கொள்வது.
முதல் இரு அணிகளுக்கு கோட்பாட்டில் வேறுபாடு இல்லை நடைமுறையில் போட்டிப்போடுகிறார்கள்.
.மனித தவறுகள் நேரும்போது . அதிகார வடிவில் தண்டித்து பழிவாங்கும் ஒரு பிரிவும்.
மற்றொரு பிரிவு மதவாத உணர்வுகளால் அடக்கி மக்கள் மனதில் ஆதிக்கம் செய்து பிரித்து ஆள்கிறது.
ஆனால் உழைப்பு +உற்பத்தி கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் பொதுவுடைமைகொள்கையை அடிப்படையாக கொண்டு முற்றிலும் வேறுபட்டவர்கள்.இவர்கள் மூன்றாம் அணி எனலாம்
உழைப்பை மட்டும் உடைமையாக கொண்ட மக்களின் உழைப்புக்குரிய ஊதியமும்,தேவைக்கேற்ற குறைந்தபட்ச வாழ்க்கை தேவைகளும் கிடைக்கும்படி சட்டமும் நிர்வாகமும் இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட வாழ்க்கை தனக்கு வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய சிரம ம் இவர்களுக்கு உள்ளது.அந்த மாற்றம் மக்களிடையே ஏற்படாதவரையில் இவர்களுக்கு ஆளும் வாய்ப்பு கிடைப்பது அரிது.
.
மூன்று அணிகளும் தங்கள் கோட்பாட்டை மக்களிடையே நடைமுறைப்படுத்த இராணுவம், ,காவல்துறை, ஊடகத்துறை, நிர்வாக கட்டமைப்பு மற்றும் நீதி மன்றங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சிபுரிய தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்ள மத்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு மோதுகின்றன.
இந்தியாவில் முதல் இரண்டு அணிகளான காங்கிரஸ்,பாரதீய ஜனதா கட்சிகள் ஒரே கோட்பாடுடன் இரண்டு அணிகளும் மக்களின் ஆசை பாசம் சபல உணர்ச்சிகளை நிர்வகித்து அவர்களின் மனதை குறிவைத்து தங்கள் பக்கம் திருப்பி வைத்துள்ளனர்
மூன்றாம் அணியாக இடது முன்னணி அறிவியல் அடிப்படையில் மக்களின் மூளையை குறிவைத்து மற்ற இரு அணிகளின் பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி ஆதரங்கள் புள்ளிவிவரங்களோடு பேசி நிரூபணங்களை அளித்துக்கொண்டிருக்கிறது..எப்படிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் அமைப்பும் தனக்கு வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்டுத்தாதவரையில் இவர்களுக்கு ஆளும் வாய்ப்பு கிடைப்பது அரிது.
அறிந்தவற்றில் சிலவற்றை எழுதுகிறேன்
கோ.சுரேந்திரபாபு செல்பேசி 9444468670
No comments:
Post a Comment